Skip to main content

காமம்: கடவுள் பாதி; மிருகம் பாதி

Wildness in bed: A journey that heals life's deepest wounds. Please avoid if you don't want to heal. 



'ளவந்தான்' திரைப்படத்தின் காட்சி குறித்துப் பேசும் முன்னர், அதன் பின்னணி பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். உளவியல் மற்றும் வரலாற்றுப் பின்னணியை உணராமல், அதன் அழகை இரசிக்கமுடியாது என்பதால், இவற்றைப் பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது.  

செக்ஸ் பொஸிடீவ் மூவ்மென்ட் : இதுவொரு சமூக முன்னேற்ற அமைப்பு. இது மேற்குலகில், 1960களிலிருந்து வீறு கொண்டது. எல்லோருக்கும் காமத்தில் முழுச் சுதந்திரம் இருக்கிறது எனவும், வெவ்வேறுபட்ட காம இரசனைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியது எனவும் போராடிய அமைப்பு. இது காமத்தில் ஒருவருக்கு இருக்கும் தனிமனிதச் சுதந்திரத்தை முன்னிறுத்தியது. தன்னுள் எழும் காமத்தை, ஒருவருக்குப் பூரணமாக அனுபவிக்க அனுமதி உண்டென்று முன்னின்றவர்கள் அனைவரும் அதில் சேருவர். இவர்கள் யாரிடமிருந்து விடுதலை கேட்டார்கள்?

சமூகமும்(நாம்) மதங்களும் காமம் பிழையானது எனவும், அது குழந்தை பெறுவதற்காக, திருமணம் எனும் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டவர்கள் மட்டும் நிகழ்த்தும் பண்பாடற்ற செயலெனவும், ஆழ்மனதில் வகுப்பெடுத்தது. காமத்தைக் கட்டுப்படுத்தச் சொன்னது. மக்கள் நம்பினார்கள். ஆனால், உள்ளிருக்கும் ஆதிகால இச்சை அதை விடவில்லை. இரண்டும் மோதிக்கொள்ள அழுத்தம் வந்தது. அழுத்தம் எதனால் வருகிறதெனத் தெரியாததால் மீண்டும் மதங்களிடம் போனார்கள். மேலும், விவாகரத்துகள் எல்லாம் அதிகமானது. மன உளைச்சல் அதிகமானது. அதனால், பலரும் தங்களைத் திருமண பந்தத்தில் இணைத்துக்கொள்ளவும் விரும்பவில்லை.  

இவ்வாறான பிரச்சனைகளை நன்றாக அவதானித்துப் புரிந்துகொண்ட சிலர், காமத்தையும் காதலையும் சுதந்திரமாக விடவேண்டுமென்று விதிகளைக் கடந்து நடந்தார்கள். பலரும் அதன்படி வாழவும் செய்தார்கள். லிவிங் டுகெதர் எல்லாம் அந்தச் சுதந்திரத்தின் ஓர் அங்கம். அது திருமணத்துக்கு வெளியிலான உடலுறவை ஆதரித்தது. கூடவே, செக்ஸ் கல்வியும், பாதுகாப்பு வழிமுறைகளும் அவசியம் என்றது. இப்பொழுது, காமம் வைத்துக்கொள்ள விரும்பும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிறையவே பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கிறது. அதைத் தனி மகிழ்ச்சிக்காக நிகழ்த்தலாம். இதையெல்லாம் ஆதரித்துச் சில தத்துவவியலாளர்களும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். மனிதர்கள் காமத்தை அனுபவித்துக் கடக்கவேண்டும் என்றார்கள்.

உண்மையில், இன்னொருவரின் காமம் சார்ந்த தேடலை நாம் தீர்மானிக்கமுடியாது. இருவரின் அனுமதியோடு அது நடப்பதால், மூன்றாவதாக மூக்கை நுழைக்கும் நபர் குறித்தோ, சமூகச் சட்டங்கள் குறித்தோ இந்த மனிதர்கள் அலட்டிக்கொள்ளவில்லை.

உளவியல் என்று பார்த்தால், எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கும். ஒருவித aggression இருக்கும். வாழ்க்கையின்மீது  கோபங்கள் இருக்கும். யாரையாவது உடல் ரீதியாகவோ அல்லது  உளவியல் ரீதியாகவோ காயப்படுத்திப் பார்க்கப் பிடிக்கும். முன்பின் அறியாதவர்கள் பற்றி கொஸிப் (Gossip) செய்வதும் ஒருவித உளவியல் தாக்குதல். உளவியல் பாதிப்பென்றால், சட்டையைக் கிழித்துக்கொண்டு தெருவில் போவது என்று நினைக்கிறோம். உண்மையில் உளவியல் பாதிப்புள்ளவர்கள் ஏஸி காரிலும் போகலாம்; காதலி இருக்கலாம்; குடும்பங்கள் இருக்கலாம். அப்படி நம்முள் இன்னொரு முகம் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு நல்ல உளவியல் மருத்துவரை நாடுவதில்லை. வெட்கத்தால் மறைப்போம். மறைக்க மறைக்க வளரும்.  

schizophrenia : ஏனைய உளவியல் நோய்களிலும் பார்க்கக் கொஞ்சம் பாரதூரமானது. இது உள்ளவர்கள், கனவையும் நிஜமென நம்புவார்கள். மிகவும் நெருங்கியவர்கள் இறந்துபோனால், அவர்கள் அருகில் இருப்பதுபோலவே கற்பனை(hallucinations) செய்வார்கள்; அவர்களோடு பேசுவார்கள். மனதில் குழப்பகரமான சிந்தனைகள் வந்துபோகும். 
Paranoid delusion : கூடுதலாகப் போர்ப் பிரதேசங்களில் இருந்துவந்த மக்களுக்கும் இருக்கும். யாராவது தன்னைக் கொல்ல நினைப்பதுபோல நினைத்துக்கொள்வார்கள். இராணுவ ஏஜென்டுகள் தன்னைப் பின்தொடர்வதாக எல்லாம் நினைத்துக்கொள்வார்கள்.


 

ஆளவந்தானில் காட்டப்படுகிற மனிஷா- கமல் உறவு அழகானது. திரைப்படத்தில் கமலுக்கு, 'schizophrenia' வும், பரனோயாவும் இருக்கும். சின்ன வயதில் சித்தியால் (அப்பாவின் இரண்டாம் மனைவி) உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்படுவான். இவற்றைத் தாங்கமுடியாமல் சித்தியைக் கொலைசெய்துவிடுவான். கூடவே தனது அம்மாவையும் இழந்துவிடுவான். சிறையிலும் சரிவரக் கவனிக்கப்படமாட்டான்.


இந்தப் பாதிப்புகள் அனைத்தும் அவன் மனதில் ஆழவும் பதிந்துவிடும்.  இறந்துபோன அம்மாவை அழைத்துப் பேசுவான். அவனுக்கு அம்மாவென்றால் மிகப்பிடிக்கும். தம்பியாக வரும் இன்னொரு கமலின் காதலியைத் தனது சித்தியென நினைத்துக்கொள்வான். அவளிடமிருந்து தனது தம்பியைக் காப்பாற்றவேண்டும் என்பது மட்டுமே அவனது குறிக்கோள். அவளும் தனது சித்தியைப்போல தன்னைக் கொலைசெய்யப் பார்க்கிறாள்(Paranoid delusion) என நினைத்துக்கொள்வான். உண்மையில் அவள் அப்படியில்லை; அவன்மீதும் அன்பு கொண்டிருப்பாள். அவனுக்கு அது புரியாது. அவனைப் பொறுத்தவரை இவள் சித்தி. அதற்கு, அவனுடைய சின்னவயதுக் காயங்கள்தான் காரணம். மற்றபடி சாதாரண மனிதர்களுக்கு அவன் தீங்கு செய்வதில்லை.

"கடவுள் பாதி மிருகம் பாதி" என்கிற பாடலில், அவனுக்கு மனிஷாவின் நிகழ்ச்சிக்கான(ஆபிரிக்க காட்டுப்புலி) விளம்பரத்துண்டு தற்செயலாகக் கிடைக்கும். அந்தக் காட்சியில் அவன், கடவுளுக்கும் மிருகத்துக்கும் இடையில் போராடிக் கவிதை செய்துகொண்டிருப்பான். அந்தப் போராட்டம் நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் மிருகத்தை மறைத்து தெய்வத்தை மட்டும் காட்டிக்கொண்டிருப்போம்.

ஆனால் அவனுக்குத் தன் பிரச்சனை தெரியும். இரண்டும் இருப்பதை ஏற்றுக்கொள்வான். மனதுக்குள் முட்டி மோதுவான். 'மிருகம் கொன்ற எச்சம் கொண்டு மீண்டும் கடவுள் செய்வாயா' என்றுவிட்டுத் தன் இதழ்நீர் தடவி அவள் உருவமுள்ள விளம்பரத்துண்டை சுவற்றில் ஒட்டி வணங்குவான். (அது அவனுடைய எக்ஸ்ட்ரீம் செய்கை)

பிறகு, அவளுடைய நிகழ்ச்சிக்கான போஸ்ட்டரைப் பார்த்துவிட்டு, கற்பனையில் அவளை அழைப்பான். அவனுக்கு ஷர்மிலியின் ஃபான்டஸி வடிவம் பிடித்துவிடும். அவள் ஒருவித, Fetish wear (Latex & Leather) அணிந்திருப்பாள்.  அது ஒருவித காமச் செய்கைக்குரிய(BDSM) ஆடை அணியும் முறை. அதை அறிந்துதான் வைத்தார்களா தெரியாது. அவனுக்கு, அவளை அந்த ஆடையில்  பார்க்கப் பிடித்திருக்கவேண்டும். அவள், அவனுக்குப் பிடித்த மழையைக் கொடுப்பாள். அவனுக்கும் அவளை மிகப்பிடித்துப்போனதும் சேர்ந்து நடனமாடுவான். நடனம் முடிந்ததும் அம்மா வந்து கேட்பாள், "உனக்கு அவளைப் பிடிச்சிருக்கா? டான்ஸ்லாம் ஆடினே?"

மீண்டும் ஹோட்டல் ரூமில் அவளை முதன்முறையாக நேரில் சந்திக்கிறான். அவனைப் பொறுத்தவரைக்கும் அது இரண்டாவது சந்திப்பு. காரணம், அவனுக்குக் கனவும் நிஜமும் ஒன்று. ஆனால், அவளைப் பொறுத்தவரை அது முதலாவது சந்திப்பு.

எக்ஸ்டஸி மாத்திரையை எடுத்துப் போட்டதும், 'Oh Bad. You wild. Don't go away' என்பாள். அவனைப் பிடித்ததும், ஒரு கஷுவல் செக்ஸ்க்குத் தயாராவாள். அவளும் ஒரு மாத்திரையைப் போட்டுக்கொள்வாள். இன்னொரு கொலைசெய்ய வந்த அவனுக்கு அவளை இன்னும் பிடித்துவிடும். அவளுக்கும் அவன் பேச்சுப் பிடித்துவிடும். ஒருவித, 'Playfulness' நிலைக்குப் போவார்கள்.

அவளிடம், "மரணமும் காமமும் ஒன்று" என்பான். கமல் ஓஷோ சொன்ன தத்துவவியலும் படித்திருக்கலாம். ஓஷோ, மனிதர்கள் இரண்டையும் பற்றிப் பேசுவதில்லை என்பார். இரண்டின்மீதும் மனிதர்களுக்குப் பயம் என்பார். 

அந்தக் காட்சியில், மிருகம்- கடவுள் என்று உரையாடிக்கொள்வார்கள். அவன் தனது  மனநிலையைச் சொல்வான். அவள் காமத்தைச் சொல்வாள். தனக்குக் காமத்தில்  இரண்டும் வேண்டும் என்பாள். அவனோ, தன்னோடு ஒப்பிட்டு ஒன்றுமட்டும்தான் கிடைக்கும் என்பான். மிகவும் அழகாக உளவியல் அறிந்து எழுதப்பட்ட வசனம் அது.

எங்களிடமும் இரண்டும் உண்டு. ஆனால் இரண்டும் சமநிலையில் இருக்கும். ஆனால் உளவியல் பாதிப்புள்ளவர்கள் ஏதேனும் ஒன்றில் மிகவும் எக்ஸ்ட்ரீமாக போவார்கள். அவன் சிலநேரம் முழுக் குழந்தை. சிலநேரம் அதீத மிருகம். இருவருக்கும் வைல்டான, ஃபாண்டஸி சமாச்சாரங்கள் பிடிக்கும். அது ஒரு அழகான காதலில், காமத்தில் முடிந்திருக்கவேண்டியது. கவனித்தால், அவன் அவளைத் தொட அனுமதிப்பான். கூடுதலாகத் துஷ்பிரயோகத்துக்கு ஆளானவர்கள் தொட அனுமதிக்கமாட்டார்கள். அதிலும் அவனுக்குப் பெண்கள் என்றால் பிடிக்காது. அவளை அனுமதிப்பான்.

அவள் BDSM நிலைக்குப் போவாள். அவளுக்கும் அது பிடிக்கும். கூடவே, அவனது சிறுவயது நினைவுகள் வரும்படி நடந்துகொள்ள அவளையே கொன்றுவிடுவான். பிறகு, அதை உணர்ந்து அழுவான்.

"யுத்தத்தில் நான் வென்று ரத்தத்தில் நீராடி புலிவடிவம் பூவாக மாறுவேன்" - வைரமுத்து 


காமம், உளவியலை மாற்றக்கூடியது. அவளோடிருக்கையில் அவன் மாறிக்கொண்டு வருவான். கட்டிலில் கொஞ்சம் மிருகம் அனுமதித்தால், மிருகம் முடிந்ததும் தெய்வம் குடியேறும். இல்லாவிட்டால் மிருகம் உள்ளேயே இருக்கும். அது மிகவும் ஆபத்து. எல்லோருக்குள்ளும் வெளியில் சொல்லமுடியாக் கோபங்கள் இருக்கிறது. இதையெல்லாம் காமம்(Wildness) வெளியேற்றும்.


“Sex is kicking death in the ass while singing.” - Charles Bukowski

அது 'kicking' or 'slapping' எதுவாக இருந்தாலும், இருவர் அனுமதியுடன் பேசி நிகழ்வது அழகு. ஈடுபடுபவர்கள் இருவருக்கும் பிடித்திருக்கவேண்டும்.

அந்தப் பாடலிலிருந்து(ஆபிரிக்க காட்டுப்புலி) ஆரம்பமாகும் காட்சி முழுதும் மரணத்தையும் காமத்தையும் தொடர்புபடுத்தும்.

"யுத்தத்தில் நான் வென்று ரத்தத்தில் நீராடி புலிவடிவம் பூவாக மாறுவேன்" என்பது வைரமுத்து எழுதிய வரிகள்.

காமமும் அதையே செய்யக்கூடியது. அதீத காமம், முடிவில் மனிதனுள் சுதந்திரம் உண்டாக்கும். புதிதாய்ப் பிறக்கவைக்கும்.

இந்தப் படம் வந்து பத்து வருடங்கள் கழித்து 'Fifty shades of grey' தொடர் நாவலாக வந்தது. அவள் காமத்தால் அவன் காயங்கள் ஆற்றுவாள். அவளுக்கும் அது பிடித்திருக்கும். அந்த மனிஷா - கமல் காதல் நீண்டிருந்தால் தமிழில் ஒரு 'Fifty shades of grey' கிடைத்திருக்கலாம். ஆனால் நந்து, கிரிஸ்டியன் கிரேயைவிடக் கொஞ்சம் பாதிப்பு அதிகமுள்ளவன். 

கடவுளுமில்லாமல், மிருகமும் இல்லாமல், இரண்டுக்கும் நடுவில் மனிதனாக வழிதேடியவனுக்காக, வைரமுத்து சில வரிகள் எழுதியிருப்பார்.

கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்தவன் கலவை நான் 
காற்றில் ஏறி மழையில் ஆடி கவிதை பாடும் பறவை நான் 
ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு துளியும் உயிரின் வேர்கள் குளிர்கிறதே 
எல்லாத் துளியும் குளிரும்போது இருதுளி மட்டும் சுடுகிறதே 
நந்தகுமாரா நந்தகுமாரா மழைநீர் சுடாது தெரியாதா 
கன்னம் வழிகிற கண்ணீர்த்துளிதான் வெந்நீர் துளியென அறிவாயா 
சுட்ட மழையும் சுடாத மழையும் ஒன்றாய்க் கண்டவன் நீதானே 
கண்ணீர் மழையில் தண்ணீர் மழையைக் குளிக்கவைத்தவன் நீதானே.

இதையெல்லாம் கலையாகத் தந்த கமல் ஒரு அற்புதக் கலைஞன். கலையின்மீது பித்துக்கொண்டவன்.

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ