Skip to main content

மலரினும் மெல்லிது காமம் 05 - பயில்தல்

மானாடும் மலைப்பக்கம் ஏரிக்கரை அருகில் 
மயிலாடும் ஜன்னல் கொண்ட மாளிகையின் அறையில் 
கண்ணாடி பார்த்துக்கொண்டே கலை யாவும் பயின்றோம்.
கருநீலப் போர்வைக்குள்ளே இரு நாட்கள் இருந்தோம்.

வைரமுத்து 

கண்ணாடியின்  முன்நின்று (Katoptronophilia) காமத்தின் நுண்கலைகள் பயில்வது காதலைத் தூண்டும். அதேநேரம், அது உணர்வின் கவனத்தைத் திசை திருப்பாமல் இருப்பதும் முக்கியம். 


தனியே, கண்ணாடியில் எமது அழகைக் கடந்திருக்கிறோம். அப்படிக் கடக்கையில், ஒன்று அழகை மெச்சிக்கொள்வோம். இல்லையென்றால், தாழ்வுமனப்பான்மை தோன்றும். நம் அழகை நாமே  மெச்சிக்கொள்வதன் தீவிர நிலை நார்சிஸம். இப்படித் துணையாகக் கண்ணாடியில் பார்த்துக்கொள்வதையும் நார்சிஸம் என்று சிலர் சொல்வார்கள். ஆனால், காமத்தைச் சேர்ந்து கண்ணாடியில் பார்ப்பது ஒருவர் சம்பந்தப்பட்டது கிடையாது. எதுவுமே எல்லைக்குள் இருக்கும்வரை அழகு. கரை மீறாதவரை ஆழி அழகு. உள்ளக் காதலும் அப்படித்தான். எதிலும், நுண்கலை காண்பது காமத்துக்கு அழகு. புதுக் கலைகள் அழகு.



சிலருக்குத் தம் உடல் பற்றிய அதிருப்தி இருந்தால், அவர்கள் தங்கள் உடலைக் கண்ணாடியில் பார்ப்பதை விரும்பமாட்டார்கள். அதனால், துணைக்கும் ஆர்வம் இருந்தால் மட்டுமே இது நிகழவேண்டும். இல்லாவிட்டால், இது ஆர்வத்தைக் குறைத்து அதிருப்தியை ஏற்படுத்தும்.

கண்ணாடியில் பார்த்துக்கொள்வது மொத்தக் காதல் நிகழ்வில் சிலநொடி மட்டுமே நீள்வதாக இருப்பதும் நல்லது. இத்தனை காலக்  கற்பனையும் நிஜமும் சேர்ந்துகொள்ளும் இடம்.

சிலருக்குத் தன் அழகுமீது விருப்பம் இருக்கிறது. பின்னிருந்து கழுத்து வளைவில் அழுத்தி  எழுதும் முத்தத்தின் நீட்சியைப் பாராட்டி, சொருக எண்ணும் கண்களோடு, தன்னைக் கண்ணாடியில் பார்த்து இரசிப்பாள். உணர்வில் மிதக்கும் தன் இதழ் அசைவையும், அவன் சேவை அழகையும் ஒருசேர இரசிப்பாள். ஆடையற்ற உடலில் மயிலிறகு ஸ்பரிசங்கள் வரைவதை இரசிப்பாள். அவள் அழகு ஆராதிக்கப்படுவதையும் பாராட்டப்படுவதையும் இரசிப்பாள்.

இவை யாவும் அவள் இத்தனை காலம் மனக்கண்ணில் சேர்த்து வைத்த கனவுகள். மனக்கண்ணில் நிறைவுறாத காட்சிகளுக்குக் கண்ணாடி உயிர் கொடுக்கும். என்றோ ஒரு தனியறையில், தான் மனதில் கண்டு  திளைத்த  காட்சியை, நினைவு நனைந்ததைக் கண்ணாடியில்  இரசிக்கிறாள். அவள் உணர்வுகளையும் அவன் கண்ணாடியில் பார்க்கிறான். அவன் செயல்களையும் கண்ணாடியில் பார்க்கிறான். இருவர் உணர்வையும்  ஒரு சட்டகத்துக்குள் காட்சி ஊடகத்துக்குள் அழைக்கிறது கண்ணாடி. இத்தனை காலமும் காட்சி ஊடகங்களில் ஏங்கிய காட்சியைக் கண்ணாடி ஒரு ஊடகமாகிக் காட்டுகிறது. பிழைகளைக் காட்டுகிறது. பயில்வோம் என அழைக்கிறது.

மணிரத்னத்தின், 'ஓக்கே கண்மணி', 'காற்று வெளியிடை' என்று கண்ணாடி பார்த்துக் காதல் பயிலும் காட்சிகள் அதிகம். "கள்வரே" பாடலில் நடனத்தைக் கொண்டே உயர் நிலையைக் கலையாகக் காட்டியிருப்பார். கொஞ்சம் தீவிரமும் மென்மையும் கலந்த காமம். "கள்வரே" பாடலில் வீடு முழுவதும் கண்ணாடி இருக்கும். கூடுதலாக ஆர்வமிருப்பவர்கள் வீட்டின் கட்டிலின் மேலேயும்  கண்ணாடி அமைப்பது உண்டு. இவற்றைத் திரையில் கலையாகக் காட்சிப்படுத்துவது என்பது இன்னொரு கலை.

Comments

Anonymous said…
The mirror magic! Do you have any hidden cameras in my home or what??

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ