Skip to main content

பாகுபலி

நீங்கள் வரலாற்றுப் படங்களிலும் அதன் காட்சியமைப்பிலும் திளைப்பவராக இருந்தால் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்கலாம். சின்ன வயதில் மகாபாரதக் கதைகளைப் படித்து, குருச்சேத்திரப் போரைக் கற்பனையில் நிகழ்த்திப் பார்த்த அனைவருக்கும் இந்தப் படம் நிச்சயம் மிகப் பிடித்தமானதாக அமையும். எங்கள் வரலாற்றிலும் சூப்பர் ஹீரோக் கதைகள் உண்டு. அதைக் கற்பனை கலந்து நேர்த்தியான 'பிரமாண்டம்'  கொடுக்க யாரும் முன்வர மாட்டார்களா என்கிற ஏக்கம் பலருக்கும் இல்லாமல் இல்லை.

'நான் ஈ' என்கிற காதல், fantasy கலந்த திரைப்படத்துக்குப் பிறகு ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியிருக்கிற படம்தான் 'பாகுபலி'. தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்துக்காகக் கிட்டதட்ட மூன்று வருடங்கள் மெனக்கெட்டிருக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படமானது  ராஜமௌலியின் பதினோராவது படம். 'பாகுபலி' ஒரு  கற்பனை கலந்த வரலாற்றுக் கதையாக அமைகிறது. இரண்டு பாகங்களைக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் முதலாவது பாகம் தான் இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது.


பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், ரானா, சத்தியராஜ், நாசர் என்று நடிகர்கள் பலரும் இருக்க, ராஜமௌலியின் விருப்பத்துக்குரிய ஒளிப்பதிவாளரான செந்தில்குமார் அழகான காட்சி வடிவங்களைக் கொடுத்திருக்கிறார். அருந்ததி, மகதீரன், நான் ஈ போன்ற படங்களில் பணியாற்றியவர். ஒளிப்பதிவிலும் பிரமாண்டம் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு புராணகால கதைக்குத் தேவையான அத்தனை பிரம்மாண்டத்தையும் ஒரு நேர்த்தியான உழைப்பின் மூலம் தந்திருக்கிறார்கள். வரலாற்றுப் படங்களுக்குத் தேவையான  நேர்த்தியான பிரமாண்டத்தைத் இந்தியச் சினிமா கண்டிருக்காது எனலாம்.

பேரரசில் நிலவும்  ராஜதந்திரச் சூழ்ச்சிகளில் இருந்து காப்பாற்றப்படும் இளவரசன் தன்னுடைய பின்னணி தெரியாமலேயே வேறொரு இடத்தில் வளர்கிறான். சில காரணிகளாலும் ஏதோவொரு தன்னிச்சையான உந்துதலாலும் விடைகளைத் தேடித் புறப்படுகிறான். இறுதியில் தான் யார் என்பதைக் கண்டடைந்து தனது பணிகளை நிறைவேற்றுகிறானா என்பதுதான் கதையின் சுருக்கமான அமைப்பு. புராணகாலக் கதைகளுக்கே உரிய வடிவம் என்றாலும் அவற்றைக் காட்சிப் படிமங்களாக அமைத்த விதம்தான் ஆச்சரியப்படவைக்கிறது.

தமன்னா , பிரபாஸ் இடையிலான காதல்க் காட்சிகள், உக்கிரமான போர்காட்சிகள் என   அனைத்திலும் பிரமாண்டம் தெரிகிறது. பிரமாண்டம் என்று தேவையற்ற செலவுகளைச் செய்யாமல், கலைகளிலும் நல்ல கற்பனைத் திறனுள்ள காட்சியமைப்பிலும் பிரமாண்டம் காட்டியிருக்கிறார்கள். அந்த வகையில் பாராட்டப்படவேண்டியது. யுத்தக் காட்சிகளில் எல்லாம் தேவையான அளவுக்கு கற்பனையைச் செலுத்தியிருக்கிறார். Lord of the rings மாதிரிச் சண்டைக் காட்சிகளைப் போல  நம் புராணக் கதைகளை  எடுத்துக் காட்டமாட்டார்களா என்று எண்ணியதுண்டு. இந்தியச் சினிமா அதை ராஜமௌலி மூலம் ஓரளவுக்கு கண்டிருக்கிறது எனலாம். 

மகாபாரதத்தில், குருசேத்திரப்போரில் மட்டுமே கேள்விப்பட்ட 'திரிசூல வியூகம்' போன்றவற்றைக் காட்சியமைப்பில் சிறப்பாக வெளிக்கொண்டுவந்திருக்கிறார். படத்தில் வருகிற அரண்மனைக் காட்சிகள், பாத்திரப் படைப்புகளில் எல்லாம் படத்துக்கு மேலும் பலமான விஷயங்கள். 

தமிழில் இதற்குத் தேவையான அத்தனை உழைப்பையும் மதன் கார்க்கி கொடுத்திருக்கிறார். வசனங்களையும் பாடல்களையும் மதன் கார்க்கி தான் எழுதியிருக்கிறார். கள் குடித்து மகிழும் கூடத்தில் 'உருக்கியோ... நட்சத்திரத் தூறல்' என்றொரு பாடல். அழகான தமிழ்ச் சொற்களைக் கையாண்டிருக்கிறார் மதன்கார்க்கி. அந்த பாடலில் வருகிற நேர்த்தியான நடன அமைப்பையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

படம் எதிர்பாராத விதமாக திடீரென்று முடிந்தது போல தோன்றினாலும், இரண்டாவது பாகத்துக்கான எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. வீணான காட்சியமைப்புகளில் பணத்தைச் செலவழிப்பதைவிட தேவையான காட்சிகளுக்கு மேலும் பிரமாண்டம் கூட்டுவது தான்  அவசியம். அதை  நேர்த்தியாகச் செய்து தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ராஜமௌலி. 

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ