Skip to main content

கண்ணில் தாகம் தீருமோ !



நீண்ட நாட்களுக்கு முதல் எண்ணங்களில் மெல்லிய வண்ணங்களை   தீட்டிய ஒரு பாடல். இந்தப் பாடலை ஒவ்வொரு முறை கேட்க்கும் போதும் ஏதோ ஒன்றை இரசித்துக்கொண்டே இருக்க முடிகிறது.

 பின்னணி இசை , காட்சியமைப்பு ,வரிகளில் விரகதாபமும் மௌனமும் கலந்திருக்கிறது. உணர்வுகளை சரியாகக் கோர்த்து உருவாக்கப்படும் படைப்புகள் மனதை கொஞ்சம் கனமாக்கிப் பின்  காற்றில் ஆடும் ஒரு இறகு போல் ஆக்கிவிட்டே செல்லும். அந்த விதி இந்தப் பாடலுக்கு பொருந்தும்.

பாடல் வரிகளில் இன்னொரு தனித்துவம் படர்ந்திருக்கிறது. அந்த வரிகளுக்குத்  தன் இனிய  குரலால் அழகு சேர்த்தது பாடகி சௌமியா.  அந்தக் குரலில் இருக்கும்  ஏக்கம் , வேதனை சில வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. கார்த்திக் ராஜாவின் பாடகித் தேர்வு சிறப்பு.

காதலனை /கணவனை நண்பனாக நினைத்துப் பாடுவது போன்ற வரிகள்.இலக்கியங்களில் தோழி என்பது போல , இந்தப் பாடலில் நண்பனாக நினைத்துப் பாடுவது ஒரு தனி அழகு.

// கோபங்கள் பேசும்போது வேதனை கூடும் ப்ரேமைகள் பேசும் போது மோகம் கூடும் //
வடமொழிச் சொற்களும் தமிழும் கலந்து வரும் வரிகள்.  வரிகளின் ஆழமும் அதை இணைத்துக்கொண்டே பயணிக்கின்றது. சொற்களின் தேர்வுகள் ,உணர்வுகளை சரியாக வெளிப்படுத்துதல் என அடர்த்தியான வரிகள்.

//மாமழை நேரங்கள் ஈரமாய் என்னை சேர்பவன் //
காட்சியமைப்போடு பொருந்திய வரிகள் . காதலுக்கான ஏக்கத்தை வெளிப்படுத்தும் வரிகள்.

//பூவின் அசைவினிலே 
ஏதோ ஒரு படபடப்பு //


மிகவும் பிடித்த வரிகள் . காதலி தன் மனநிலையை , உணர்வில் கலந்திருக்கும் ஒரு படபடப்பை வெளிக்கொண்டுவரும் வரிகள். வரிகளில் ஒரு புதுமை.

காட்சியமைப்பே ஒரு கவிதை போல் உணர்வுகளை வடித்திருக்கிறது. வெளியில் மழை , ஜன்னலில்  வழியும் நீர்த்துளிகள் என அனைத்தும் உள்ளே உருவாகும் உணர்வுகளை கரைத்துக்கொண்டு போகிறது.

கார்த்திக் ராஜா எனும் ஓர் அற்புதமான இசையமைப்பாளர் இசையை எங்காவது இருந்துவிட்டு ஒரு சில படங்களில் தான் கேட்க்க முடிகிறது. இருந்தாலும் மனதில் என்றும் சுகமாய் அமர்ந்துகொள்பவை  அந்த இராகங்கள். அது போல் தான் இந்தப் பாடலும் அமைந்திருக்கிறது.



முழுமையான பாடல்

Comments

arasan said…
உங்கள் தளத்தைப் பற்றி சிறு விளக்கம் ...
காண : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_12.html
இன்றைய வலைச்சரம் பார்த்து உங்கள் தளம்
வந்தேன் ..
மிகவும் அருமையான எழுத்துக்கள் உங்களுடையது...
இனி தொடரும் வரவு...'

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...