Skip to main content

அழிவிலிருந்து ஆக்கம் 01 - ஊடகங்கள்




ஒரு சமூகமோ, அமைப்போ அல்லது ஒரு படைப்போ திருத்தங்களுக்கு உள்ளாவது என்பது வேறு ,அழிவுக்குள்ளான  ஒரு சமூகத்தை புதிதாக கட்டியெழுப்புவது  என்பது வேறு .

உதாரணமாக சொல்லப்போனால் நாம் செய்த விடயங்களில் தவறு இருந்தால் அதை திருத்தப்பார்ப்போம். சில விடயங்களை  திருத்த முடியாமலும் ,தவறுகளை சரிவரக் கண்டுகொள்ள  முடியாமலும் போகும் போது அதனை முற்றாக அழித்துவிட்டு மீண்டும் செய்ய முயல்வோம் . இது ஒருவித சௌகரியத்தை எமக்கு கொடுக்கும். புதிய அணுகுமுறைகளையும் பிரயோகப்படுத்துவது இலகு.

பொருளாதாரத்தில் இதை Creative destruction என்று சொல்வார்கள் . ஆனால் இந்த பதிவு பொருளாதாரம் பற்றியது அல்ல. மனிதர்களின் நாகரிகமும் கலாச்சாரமும் மனித சிந்தனைகளின் வளர்ச்சி பற்றியதும்.  

திருத்தங்களுக்கு உட்படுத்துவதை விட ,முழுதாக அழிவடைந்த ஒன்றை மீண்டும் கட்டியெழுப்பும் போது அது முற்றிலும் புதிய வடிவமாக உருவெடுக்கக் கூடும். மீண்டும் புதிதாய் உருவாக்கப்படும் போது அதில் நல்ல விடயங்களும்  இருக்கக்கூடும் அல்லது மக்களை பின்தங்கிய நிலைக்கு இட்டுச்செல்லும் அளவுக்கு அடிமைபப்டுத்தும் விடயங்களும் தீய விடயங்களும் இருக்கக் கூடும்.

சில சமூகங்களில் இந்த அழிவுகள் தானாகவே நிகழ்ந்து விடும். அதற்குப்  போர் ,இயற்கைச் சீற்றங்கள் என்று பல காரணங்கள் சொல்லலாம். அதன் பின்னர் மீண்டும் அந்த சமூகம் கட்டியெழுப்பப்படும் போது அதில் மிக முக்கிய பங்கு வகிப்போர் அந்த சமூகத்தின் புத்திஜீவுகளும் கற்றறிந்தோர் எனப்படுவோரும் ஊடகங்களுமே.

இதில் பாமரர்  , சிறுவர்கள் உள்ளடங்கலாக  அனைவரையும்   எளிதில் அடையக்கூடியவை ஊடகங்கள்.  ஊடகங்கள் சமூகத்தில்  முக்கிய பங்களிப்பு செய்வதால் ,ஊடகவியலாளர்களுக்கு மிகப்பெரிய சமுதாய பொறுப்பு இருக்கிறது . இதை அவர்களுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை . ஆனால் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

ஒரு சில ஊடகங்கள் மக்கள் எளிதில் அடிமையாகி விடக்கூடிய விடயங்களையே மீண்டும் மீண்டும் ஊட்டி வளர்க்கின்றன. மக்களை அடியமையாக்கும் எந்த விடயத்தையும் மீண்டும்  வளர்ப்பது ஆபத்தானது. இது அழிந்து மீண்டும் புத்துயிர்  பெறும் சமூகத்தின் சிந்தனையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. ஒரு சமூகத்தை குறிப்பிட்ட சில விடயங்களுக்கு(உதாரணமாக சினிமா நடிகர்கள் , கிரிக்கெட்டை எடுத்துக்கொள்ளலாம்) அடிமைப்படுத்தி வைத்திருக்கும் போது அவர்களின் சிந்தனையும்,சுய அறிவும் எந்த நிலைக்கு செல்லுமென்பதற்கு  உதாரணமாக சில நாடுகள் இருக்கின்றன .  

ஒருவரின் இன்னொன்றின் மீது வெறுப்பையும்  காழ்ப்புணர்ச்சியையும்  உண்டாக்கி அதன் மூலம் ஒரு போட்டியை உண்டாக்கி தொடர்ந்து நிலைத்திருப்பதே தற்போது பலரும் கையாளும் உத்தி. முக்கியமாக சில கருத்துகளும்  பயனுள்ள  விடயங்களும் நிகழ்ச்சிகளும் இருக்கும் போது அதே பொழுதுபோக்கு உத்தியை மீண்டும் மீண்டும் 24 மணித்தியாலமும் கையாளும் உத்தியை எப்போது இந்த தமிழ் ஊடகங்கள் கைவிடப்போகின்றன .?

ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தாம் சமூகத்தின் முதுகெலும்பு என்பதை உணராதவரை எத்தனை புதிய சிந்தனைகளை புத்திஜீவிகள் சமூகத்தில் தோற்றுவித்தாலும்  அவையனைத்தும் இல்லாது போய்விடும் . காரணம் ஊடகங்கள் மிகப்பெரிய அளவில் மக்களின் தரத்தினை தீர்மானிக்கும் சக்திகள்.

இதில் மக்களின் தரம் என்பது அவர்களின் பொருளாதார தரம் பற்றியதல்ல . சிந்தை ,தூரநோக்கு பார்வை , சுய அறிவு , எதையும் ஒப்பிட்டு பகுத்தறியும் தன்மை என அவர்களின் நாகரிகம் ,கலாச்சார வளர்ச்சி போன்ற மிகப்பெரிய வட்டத்தை உள்ளடக்கியது. 

Comments

வலைச்சரம் மூலமாக தங்களது வலைப்பூவினைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ