Skip to main content

child prodigy பற்றிய தேடலில்

child prodigy பற்றிய தேடலில் பல அறியக்கிடைத்தது .

குறைந்த வயதிலேயே சாதனை படைத்தார், குறைந்த வயதிலேயே பட்டம் பெற்றார் வளர்ந்தவர்களே சித்தியடைய கடினப்படும் பரீட்ச்சையில் எல்லாம் சித்தி பெற்றார்கள்னு கேள்விப்படுவோம்  இல்லையா !

இப்படிப்பட்டவர்களை தான்  child prodigies என அழைக்கின்றனர் .  

சின்ன வயதிலேயே பெரியவர்களுக்குரிய அறிவை பெற்றவர்கள் தான் இவர்கள் .

ஆனால் இதில் நாம் அதிகம் கேள்விப்பட்டது கணித மேதை ராமானுஜன் , இசை மேதை பீத்தோவன், மொசார்ட்   பற்றி தான் .  ஆனால் விக்கியில் பெரியதொரு வரிசை இருக்கிறது . Wiki

ஆனால் இவர்களில் அண்மையில் அதிகம் அறியப்பட்டவர் அண்மையில் ஜனவரி 2012 இல் தன்னுடைய 16 வயதில் மூளை பாதிப்பு ஏற்பட்டு இறந்து போன அர்பா கரீம் . பாகிஸ்தானை சேர்ந்தவர் 9 வயதிலேயே மைக்ரோசொப்டின்  MCP முடித்தவர் . 




இயல்பாகவே குழந்தைகள் திறமைசாலிகள் ஆனால் மேலதிக எதிர்பார்ப்பால் / அழுத்தங்கள் அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் போது அவர்கள் தொடர்ந்து சாதிக்க முடியாமல் போகிறது என்னும் கருத்து பல கட்டுரையாசிரியர்களால்  முன் வைக்கப்படுகிறது . 


சின்ன வயதில் சாதிப்பவர்கள் பெரும்பாலானோர்  தொடர்ந்து வளர்ந்த பின்னர் சாதிப்பதில்லை (பெரிய அளவில் ) . சமூகத்தின் அழுத்தம் குழந்தைகளை தன் பாதையில் விடாமல் எதிர்பார்ப்பை திணிக்கிறார்களா ?

இது நம் சமூகத்தினில்  நிலவும் மிகப்பெரிய பிரச்சனை . 

Comments

நல்லதொரு தகவல்கள்...

முடிவில் உண்மையாய் சொல்லி உள்ளீர்கள்...

தொடர வாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன் அவர்களே .. :)

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...