Skip to main content

The Way Home (2002) - கொரிய திரைப்படம்



நாம் சிறுவர் பிராயத்தில் கடந்து வரும் நபர்கள் , உறவுகளில் எம் மீது அதீத அன்பு வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களின் அன்பை சரியாக புரிந்துகொள்வதில்லை.காலங்கடந்த பின்னரே இந்த உறவுகளின் அன்பின் ஆழம் எமக்கு தெரியவரும் . அவர்களின் இன்மையை உணரும் போது இது இன்னும் அதிகமாகும் .

அவர்கள் மீதான வெறுப்பிற்கு அவர்களின் தோற்றம் , நடத்தைகள் காரணமாக இருக்கலாம் . ஆனால் அவர்கள் வைத்திருக்கும் அன்பு ஆழமானது . எமக்கு எதுவெல்லாம் சின்ன சின்ன மகிழ்ச்சியை தருமோ அதையெல்லாம் அவர்கள் மனம் கோணாது செய்வார்கள் . அந்தளவு முதியவர்கள் எம் மீது வைக்கும் அன்பு சிறிது கூட சுயநலமில்லாத அன்பு எனலாம் .

ஆனால் அவற்றை நிறைவேற்ற அவர்கள் என்ன என்ன முயற்சிகள் மேற்கொண்டார்கள் என்பதை நாம் உணர்வதில்லை .எமது விருப்பங்களை அவர்கள் நிறைவேற்ற நிறைவேற்ற எமக்கு விருப்பங்கள் அதிகரிக்குமே தவிர அவர்கள் நிலையை புரிந்துகொள்வதில்லை .


அப்படிப்பட்ட ஒரு சிறுவன் பாட்டியுடன் தங்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகிறான் . அந்த சிறுவனுக்கும் அவனது கிராமத்து பாட்டிக்கும் இடையேயான பாசம் , வெறுப்பு ,கலந்த உறவுப்பயணம் தான் இந்த திரைப்படம் .

முதியவர்கள் இளம் சமுதாயம் மீது செலுத்தும் எல்லையற்ற அன்பை, சற்றும் தொய்வில்லாத நேர்த்தியான திரைக்கதையினூடு சொல்லியிருக்கிறார் அந்த பெண் இயக்குனர் .

தென் கொரியாவின் தலை நகர் சியோலில் இருந்து தொலை தூரத்தில் இருக்கும் ஒரு கிராமம் நோக்கி ஒரு தாயும் மகனும் பயணம் செய்வதோடு கதை ஆரம்பிக்கிறது . அமைதியற்ற ,குழப்படியான சிறுவன் என்பது அவன் நடத்தைகளை வைத்தே சொல்லப்படுகிறது . இருவரும் ஒரு கிராமத்தில் உச்சியில் தனியான இருக்கும் ஒரு வீட்டை அடைகின்றனர் .

அங்கிருக்கும் வயதான பாட்டியிடம் , தான் வேலை  தேடிக்கொண்டிருப்பதாகவும் அதுவரை தன்னுடைய பிள்ளையை பார்த்துக்கொள்ளும் படியும் சொல்லிவிட்டு தலைநகர் சியோலிட்க்கு செல்கிறார் தாய் .

முதல் சந்திப்பிலேயே 'என்னை தொடாதே அழுக்காக இருக்கிறாய்' என்கிறான் சிறுவன் . அவனுக்கு அந்த பாட்டி மீது விருப்பமில்லை . படிப்படியாக அவரது அன்பை எப்படி உணருகிறான் என்பதை நேர்த்தியான காட்சி அமைப்புகள் ,சம்பவங்களை வைத்தி சொல்லியிருக்கிறார் இயக்குனர் . மிகுதியை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .


இதில் வரும் ஒவ்வொரு காட்சிக்குள்ளும் எம்மை ஈர்த்து விடுவது தான் இயக்குனரின் வெற்றி. அதுவும் ஒவ்வொரு காட்சியும் எம்மை பிரதிபலிப்பதாக திரைக்கதையின் உதவியோடு கொண்டு செல்வது தான் படத்தின் வெற்றி .

இடையிடையே சிறுவனிடையே இருக்கும் ஈகோவையும் நகைச்சுவையான காட்சி அமைப்புகள் மூலம் காட்டியிருப்பார் இயக்குனர் .

எந்தவித ஆர்ப்பாட்டமும் , அழுது புரளும் காட்சிகளும் இல்லை . ஆனாலும் மனதை மென்மையாக வருடவும் செய்யும் , ஓங்கி அடித்தால் போல இறுக்கமாக்கவும் செய்யும் காட்சிகள் .

இப்போதிருக்கும் தலைமுறை இடைவெளியில் இது போன்ற படங்களை அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும் .

இந்த படத்தை ஆங்கில உப தலைப்போடு இங்கு பார்க்கலாம் ...

Comments

பாலா said…
இந்த படத்தை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அருமையான பகிர்வு

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...