Skip to main content

7 ஆம் அறிவு - நம்மை இங்கு நாம் தொலைத்தோம் ! தொலைப்போம் !

 ஒரு முறை சுஜாதா அவர்களிடம் ஒருவர் 7 ஆவது அறிவு என்னவாக இருக்கும் என கேட்டதற்கு தொழிநுட்பத்தை .ஊடகங்கங்களை பயன்படுத்தி செய்யப்படுவது என கூறினார் . உதாரணமாக மனிதன் உருவாக்கிய கணணி மனிதனை விட வேகமாக வேலைகள் செய்யும் . அதே போல இயற்கை ஊடகங்களை(சக்திகளை ) பயன்படுத்தும் திறன் சித்தர்களுக்கு இருந்திருக்கிறது .அதானால் தான் இந்த பெயராக இருக்க வேண்டும் .



7 ஆம் அறிவு திரைப்படம் பற்றி விமர்சனமாக இந்த பதிவை வைக்க போவதில்லை . சில விமர்சகர்கள் என்போரின் விமர்சனங்களுக்காக எழுதும் பதிவு .

அதற்கு முதல் இப்போது இருக்கும் தமிழ் மேதைகள் கூட்டம் பற்றி ஒரு வித அறிமுகம் கொடுக்கிறேன் .

இந்த மேதைகள் கூட்டத்தால் எந்த பயனும் இதுவரை காலமும் தமிழுக்கு, சைவத்துக்கு இருந்ததில்லை . எழுத்துலக பிரம்மாக்கள் என்பவர்கள் இலக்கிய சொட்ட சிறு கதையையும் ,கவிதைகளையும் இணையம் முழுக்க கொட்டி வைத்திருக்கிறார்கள் . கவிதைகளுக்கு ,கதைகளுக்கும்,முக்கியமாக சினிமாவுக்கும் இணையத்தில் பஞ்சமில்லை . ஒரு விஞ்ஞானம் பற்றிய விடயமோ ,அது பற்றிய ஆராய்ச்சிகளோ இணையத்தில் இல்லை .தமிழை,தமிழின் தொன்மைகளை விஞ்ஞான பார்வையில் தேடினால்  ஒன்றையும் காணக்கிடைக்காது .ஒரு சில பிளாக்கர்களின்(எண்ணலாம்) ஆக்கங்கள் தவிர .

இந்த நேரத்தில் போதிதர்மன் எனும் கதாப்பாத்திரம் 7 ஆம் அறிவில் இருக்கிறது என கேள்விப்பட்டேன் . இணையத்தில் தேடிய போது ஆங்கிலத்தில் பல விடயங்கள் கொட்டிக்கிடந்தது . தமிழில் ஏழாம் அறிவோடு சேர்ந்த செய்திகளாகவே போதிதர்மன் பற்றி தமிழில் காணக்கிடைத்தது . 


யாராவது ஒருவர் தமிழின் தொன்மை பற்றி ஆராய்ச்சி செய்தால் அதை பற்றி ஒருவர் கூட வாய் திறந்து பேசுவதில்லை . செம்மால் மானவை எனும் பேராசியர் திருக்குறளில் 140 குறள்களில் இருக்கும் நவீன மருத்துவம் பற்றிய தகவல்களை ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள் . இவ்வளவு பெரிய பொக்கிஷத்தை வைத்துக்கொண்டு இத்தனை காலம் எப்படி இருக்கிறீர்கள் என்பது அவரின் கேள்வி??? .இது எத்தனை பேருக்கு தெரியும் .எத்தனையோ பேர் மருத்துவம் படிப்பீர்கள் .யார் தேடியிருக்கிறீர்கள் ! எத்தனை எஞ்சினியர்களுக்கு தஞ்சை பெரும் கோவிலின் கட்டடக்கலை தெரியும் ! எத்தனை பேர் நீங்கள் படிக்கும் துறையில் தமிழை நவீன மயப்படுத்த தயாராக இருக்கிறீர்கள் . இத்தனைக்கும் தகுதி இருந்தால் 7ஆம் அறிவை .முருகதாஸை நீங்கள் தவறாக விமர்சிக்க முடியும் .

வைரமுத்துவிடம் ஒரு பெரிய நடிகர் தமிழ் வருவது போல பாடலில் வரி எழுதி தாருங்கள் ,தாய் குலத்தோடு ஒரு சீன்,உழைக்கும் வர்க்கத்தோடு ஒரு சீன் என கேட்டு வாங்குகிறார்கள் ஒரு உழைப்பும் ஒரு விடயமும் இல்லாமல் . இது எதை, பாச உணர்வை  தூண்டி ?யாரை முட்டாளாக்கி பணம் சம்பாதிக்கும் வழி ? இந்த நடிகரின் எல்லா பாடல்களிலும் தமிழ் வருவதை கவனிக்கலாம் . இது ஒரு விடயத்தை சொல்லி,வரலாற்றை சொல்லி தானே தமிழ் தமிழ் என்கிறார்கள் .அதை விட இது எவளவோ மேல்.  

தமிழ் உணர்வை தூண்டி விட்டு பணம் சம்பாதிக்க முடியும் என்றால் அதில் எனக்கு பெருமையாக இருக்கிறது .தமிழ் உழைப்பது பெருமை தானே ! அவர் பணம் பண்ணுவது ,கருணாநிதி குடும்பம் பணம் பண்ணுவது ,சூர்யா விஜய் சண்டை ,வரலாறு தவறு ,முருகதாஸ் தவறு என்பதை விட்டு சொன்ன கருத்து புரிந்து கொண்டீர்களா முதல் ? அதற்காக செயற்படுவீர்களா ? .ஒருவருமே செய்யாத போது ஒருவன் செய்ததை மட்டம் தட்டி ,அன்றோடு மறந்து விடுவீர்கள் தானே . 

போகி என்ற பெயரில் எங்கள் முக்கிய குறிப்புகளை அழித்தார்கள் என்பது முற்றிலும் உண்மை . எம் முன்னோர்களை சூரன் என்று ,நரகாசூரன் அளித்த நாளை எம்மையே கொண்டாட வைத்துள்ளார்கள் புத்திசாலி ஆரியர்கள் .இன்றும் பிராமணனுக்கு அடிமையாகி பணத்தை சும்மா இறைக்கிறோம் தானே ? தமிழனுக்கு எந்த மதமும் இருந்திருக்கவில்லை ,அவன் கண்டுபிடித்த விடயங்களை ,பொக்கிஷங்களை படையெடுப்புகள் மூலம் பின்னர் எம்மை ஆண்டவர்கள் அழித்தார்கள் என்பது உண்மை . சித்தர்கள் புத்தகங்களில் நவீன விஞ்ஞானம் இருப்பது போன்ற விடயங்கள் எமக்கு தெரியும் .ஆனால் சிலபஸ் படி படித்தோம் ,வேலை கிடைத்தது .பணம் பணம் என்று  ஓடினோம் என்று போய்க்கொண்டே இருப்போம் . ஏன் இன்னும் அறிவியலுக்கு ஒவ்வாத சித்திரையை புதுவருடமாக நாம் கொண்டாடவில்லையா ?? 

இதுவரை தமிழ் சினிமா காட்டாத பக்கத்தை தைரியமாக தமிழை நம்பி எடுத்திருக்கிறார் முருகதாஸ் . முதல் நிமிடங்களில் பல்லவ சாம்ராஜ்ஜியத்தை காட்டும் போதே ஒரு வித திமிர் தொற்றிக்கொள்கிறது. சூர்யாவின் மிடுக்கான தோற்றம் ஒரு வீரனை முன்னிறுத்தியது . போதி தர்மன் பற்றிய முதல் 15 நிமிடங்களுக்கு மிகவும் உழைத்திருக்கிறார்கள் . இதே காட்சி சீனப்படத்தில் வந்திருந்தால் சங் சாங் என்று பேசியிருந்தாலும் பார்த்துவிட்டு இப்படி எல்லாம் தமிழ்ல எடுக்க மாட்டாங்களே என்று திட்டு வேறு . அதே தமிழில் எடுத்தால் ?

படத்தில் வரும் நோக்கு வர்மம் என்பது சித்தர்கள் பற்றி வாசித்தவர்களுக்கு தெரியும் . நோக்கு வர்மம் மட்டும் அல்ல .சித்தர்கள் பல கலைகள் பலருக்கு தெரியாது என்பது நம் துரதிஷ்டம் . ஒன்றுமே தெரியாதவிடத்து இப்படியொன்று இருக்கிறது,தமிழனின் பொக்கிஷங்களில் விஞ்ஞானம் இருக்கிறது என்று நினைவு படுத்தியது முருகதாசின் குற்றமாக இருக்கலாம் .

எம் முன்னோர்களை வணங்காமல் அவர்களை விஞ்ஞானிகளாக பாருங்கள் என்று ஒரு செய்தி வருகிறது . இது எத்தனை பேருக்கு புரிந்திருக்குமோ தெரியவில்லை .

இந்த திரைப்படத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு ஒரே பதில் சொல்லலாம் . "நம்மை இங்கு நாமே தொலைத்தோம் " . நிச்சயம் தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் . பார்ப்பதோடு மட்டும் நிறுத்தி விடாதீர்கள் . 

Comments

Unknown said…
என் மனதில் உள்ள கோபத்தை தன்மையாக வெளிப்படுத்தியுள்ளீர். நன்றி
அன்பரே.....
ஒரு தமிழனா ஆதங்கபட்டுரிக்கிங்க, உங்களோட கருத்துக்குள் முழுக்க உண்மை.

ஆனா ஆரியர் கிட்ட நாம இன்னும் அடிமையா இருக்கிறோம் அப்படின்றது முழுக்க உண்மை கிடையாது, வேணும்னா சில சுய நல அரசியல் வாதிங்க கிட்ட இருக்கம்னு சொல்லுங்க ஒத்துக்கலாம்.
G.Ragavan said…
என்னுடைய கருத்தைப் பிரதிபலித்திருக்கின்றீர்கள். :)
http://gragavanblog.wordpress.com/2011/10/27/%e0%ae%8f%e0%ae%b4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%9c-%e0%ae%86%e0%ae%a4/
அஹோரி said…
நல்லா சொன்னீங்க. திருந்துவானுங்கன்ட்றீங்க ம்ம்கூம் .
என்னா தல , இந்தப்போடு போட்ருக்கீங்க..பாத்துட்டு வந்து சொல்றேன்..நன்றி ஒரு வித்தியாசமான பதிவிற்கென.!
தமிழனின் பொக்கிஷங்களில் விஞ்ஞானம் இருக்கிறது /

அருமையான பகிர்வு!

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ