Skip to main content

மதன் கார்க்கி வரிகளின் ரசிகனாய் - 180 பாடல் வரிகள்

பாடல்கள் என்றால் முதலில் அதில் வரிகளை உன்னிப்பாக ரசிப்பவன் நான் . வரியோடு சேரும் போது தான் அதில் உயிரோட்டம் இருக்கும் .

இதற்க்கு ஒரு காரணம் வைர வரிகளின் சொந்தகாரர் வைரமுத்து அல்லது வரிகளிலேயே  இசை கொண்டுவரும் கண்ணதாசனின் வரிகளாகவும் இருக்கலாம் . எல்லாவற்றையும் விட தமிழின் அழகை உணருவது மிக முக்கிய காரணமாக இருக்கலாம் .

ஆனால் அழகான தமிழ் சொற்களை கொண்டலாய்( :-) ) பொழியும்  மதன் கார்கியின் மீதான ஈர்ப்பே இரும்பிலே ஒரு இருதயத்தில் இருந்து தொடர்கிறது  .
புதிய படமான  180 இல் மதனின் பாடல் வரிகளை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்ப்பை சற்றும் குறைக்கவில்லை .முன்னைய கார்கியின் வரிகளுக்கான  பதிவு ..



முதலில் ரசித்த பாடல் .....

சந்திக்காத கண்களில் .... -பாடலை கேட்க்க

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
 செய்ய போகிறேன் 
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய் 
பெய்யப்போகிறேன் ...

குவியமில்லாவுக்கு பிறகு ஈர்த்த சொல் கொண்டலாய் . கொண்டலாய் என்றால் மேகம்  . சிந்திக்காது சிந்திடும் மேகம் .அழிந்து வரும் அழகான சொற்கள் அறிமுகம் தொடரவேண்டும் .



அன்பின் ஆலை ஆனாய் 
ஏங்கும் ஏழை நானாய் 

அன்பையே கொண்டிருப்பவனிடம் ஏங்கும் பெண்ணின் ஏக்கமாய் ஒலிக்கும் வரிகளில் சொற்களின் பாவனை அருமை .

இணையும் முனையம் இதயம் என்று ஆனாலே 
பயணம் முடியும் பயமும் விட்டு போகாதோ  

இரண்டு இதயங்கள் ஒரே சமயத்தில் இணையும் இடம் இதயம் என்றானபின் பயம் இல்லை என்று காதலின் அர்த்தம் இரு வரியில் சொல்லும் காதல் வரிகள் . 

 நான் கேட்டு  ரசித்த  அடுத்த  பாடல் துறு துறு கண்ணில் ......

இந்த பாடல் வரிகளை தீட்டிப்பாருங்கள் . ஒவ்வொரு வரிகளுக்குள்ளும் வைரம் ஒளிரும். உணர்வீர்கள் .குழந்தைகள் உலகத்தை எப்படி பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்ற வரிகள் .

புதிய புதிய உலகம் வேண்டாமே 
நேற்றுலகம் நான் காண்பேன் 
தூசில்லா பூங்காற்றிலே ...

நவீன உலகின்,  மனித மனதின் ஏக்கம் மாசில்லாத  பூங்காற்று . ஏக்கத்தை இன்னும் அதிகரிக்கும் வரிகள் .


இது மதன் கார்கியின் சிறப்பு . வரிகளுக்கும் பாடகரின் உச்சரிப்புக்கும் மேலும் அழகு. மீண்டும் தமிழின் அழகை கொண்டுவந்துள்ள ளகர வரிகள் மிகவும் பிடித்தது .

பல நாள் இருளும் 
ஒரு நாள் சுருளும் எனவே !
மருளும் மனதில் 
ஒளியாய் திரளும் கனவே !

மருளும் - பயப்படும் 
இருளான வாழ்க்கையையும் ,இறுதியில்  இல்லாமல் போகும் வாழ்க்கை எனவும் நினைத்து மருளும் (பயந்து மிரண்டுகொண்டிருக்கும்)  மனதிற்கு ஒளியாய் இருப்பது கனவே .  வாழ்க்கையின் அர்த்தம் இந்த வரிகள் .இந்த வரிகளின் அழகு உணர பாடலை கேளுங்கள் .

ஏஜே மனம் மறைப்பதேன் பாடலில் ரசித்தது  ..

நாடியை தேடி உனது கரம் தீண்டினேன் 
நாழிகை ஓடக்கூடா வரம் வேண்டினேன் 


இந்த வரியை சிந்தித்த மதனின் சிந்தனைக்கு வாழ்த்துக்கள் .காதலியின் கையை தீண்டும் போது கூட ஆவலுடன் அவள் நாடியிலேயே நேரம் கணித்து நாழிகை ஓடக்கூடாது என வரம் கேட்கும் காதலன் . நேரம் போக கூடாது என்ற எண்ணத்தையும் காதலியை தீண்டுவதையும் இணைத்தது நாடியில் நேரம் பார்ப்பதை உணர்த்துவது அருமை .இரு வரிகளுக்குள் எண்ணமும் நிகழ்வும் .

இளமை ததும்பும் வரிகளிலும் விடவில்லை ..

மேல் விழும் தூறல் 
எனது ஆசை சொன்னதா 
கால் வரை ஓடி எனது 
காதல் சொன்னதா ?

காதலை  சரியாய் சொல்லும் மொழி  மோகம்  என்பதையும் அழகாக விளக்கும் வரிகள் .

இந்த வரிகள் எதிர்பார்ப்பை குறைக்கவில்லை ..அடுத்த பாடல்களின் அழகான வரிகளுக்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது . மதன் கார்கியின் தரமான வரிகளின் ரசிகனாய் .... 

Comments

Anonymous said…
அருமையான தொகுப்பு
Jana said…
தாங்கள் சொன்னதுபோல வரிகள் அருமையாகத்தான் இருக்கு..நீங்க சொல்லித்தான் பாடல்களை கேட்கப்போகின்றேன்.
ம்..நடத்துங்க சுதா..காதல் பாடம் கற்க உம்மிடம் வருகிறேன் என்ன விலை கொடுக்க வேண்டும்ம்ம்ம்ம்,,,?!
அருமையான வரிகள்..
Chitra said…
அருமையான பகிர்வு.... Super!
Nice Lines...
Ungalaalathaan naan madan kaarkki varigalai kavanikka aarambhithen... Thanks for Introducing...
Mahan.Thamesh said…
அருமையான பதுவு நண்பரே
பாலா said…
நல்லா இருக்கு நண்பரே
Dinesh said…
Nice to read..like listening to the songs.

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ