Skip to main content

ஐங்ஸ்டெயின் கேள்விகள் ?? - சீனத்தத்துவம்

ஒருவன் தானாக தன்னை உணர்ந்து தானாக சிந்திக்க தொடங்கும் போது தான் ஒரு பூரண அறிவை எட்ட முடியும் என்பது உண்மை என்பதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும் ஐங்ஸ்டெயின் ஒரு சிறந்த உதாரணம் என்பது சிறு குழந்தைகளில் இருந்து அவர்களது பெற்றோர்கள் வரை தெரிந்திருக்க வேண்டும் .

வெறும் புள்ளிகளிலும் , வேறு ஒருவர் சொல்லிக்கொடுத்த விடயங்களிலும்,மனப்பாடங்களிலுமே  தற்போதைய அறிவு நிர்ணயிக்கப்படுகிறது . இவை அனைத்திற்கும் விதிவிலக்கு ஐங்ஸ்டெயின்  எனலாம் ..


ஐங்ஸ்டெயின் தனது ஆரம்பக்கல்வியிலேயே பல கேள்விகளையும் தேடலையும் தொடங்கியவர் . " ஏன் மாணவர்கள் எல்லோரும் பதில்  சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் , ஆசிரியரை பார்த்து  கேள்விகள் கேட்க்காமல் " என மனதிற்குள் இருத்திய முதல் கேள்வி , இறுதிவரை அவரை கேள்வி கேட்க்க வைத்தது .
"He who asks a question is a fool for five minutes; he who does not ask a question remains a fool forever."
என்று ஒரு சீனத்தத்துவம் உண்டு . "யார் ஒருவன் கேள்வி கேட்க்கிறானோ அவன் ஐந்து நிமிடம் தான் முட்டாள் , கேள்வியே கேட்க்காமல் இருப்பவன் முழுநேர முட்டாள் ".

ஐன்க்ச்டேயின் படிப்பில் உருப்படப்போவதில்லை என அவனுடைய தலைமை அதிகாரி அவர் தந்தைக்கு சொன்னார் .

வீட்டிலேயே கல்வி தொடர்ந்தாலும் அவருடைய தந்தை அவனுக்கு முதன் முதலாக வாங்கி கொடுத்த கொம்பாஸ் இலிருந்த முனை முள் வடக்கு நோக்கியே இருந்தது .

இது ஏன் எப்போதும் வடக்கு நோக்கியே உள்ளது ..? அப்படியானால் இதற்க்கு எதோ ஒரு விசை எங்கிருந்தோ  பிரயோகிக்கப்பட வேண்டும் . இதை சுற்றி எதோ உள்ளது என அப்போதே சுயமாக சிந்திக்க தொடங்கியவர் .

கல்லூரிகளிலும் வேறு நண்பர்களிடம் குறிப்புகளை எடுக்க சொல்லி விட்டு வகுப்பில் இருக்க மாட்டார் .. பாடத்திட்டத்தில் இல்லாதா புத்தகங்களை தேடித்தேடி படித்தார் . வெளியில் இருந்து அவராக உணர்ந்து படித்ததே அதிகம் எனலாம் . 

அவருடைய வரலாறு எழுதிய கிளார்க் என்பவர் he “found his real education elsewhere, in his own time.” என குறிப்பிட்டு இருந்தார் .

இவ்வாறு தன்னை தானே மேம்படுத்திக்கொண்ட மனிதன் எனலாம் . குழந்தைகளுக்கும் சரி யாருக்கும் சரி உண்மையான வழிகாட்டியாக எப்போதும் ஐங் ஸ்டெயினை எனலாம் ..

இந்த சமுதாயத்திற்கு ஒரு மனிதனை எடை போடும் அளவுக்கு அறிவு கிடையாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அவர் . 
தொடரும் ...

Comments

கணேஷ் said…
நல்ல தகவல்கள்...அடியேனும் ஐன்ஸ்டீன் அவர்கள் பற்றி எல்ய்ஹி இருக்கிறேன்..நேரம் இருந்தால் பாருங்கள்...
Anonymous said…
Why do we change foriegn place names to other than the real name? Example being Munchen or Munich?
Unknown said…
heyyy .... sooopppprrrrr :)

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ