Skip to main content

மனிதன் ஏன் இரண்டு கால்களால் நடக்கிறான் ??

மனிதன் ஏன் இரண்டு கால்களால்  நடக்கிறான் ?? மனிதன் உருவாக்கிய கடவுளும் இரண்டு கால்களுடன் இருப்பதாலா ?


டார்வினி கூர்ப்பு கொள்கைக்கு எதிராக  சில கேள்விகள் கேட்க்கப்பட்டு மதவாதிகளால் அலட்ச்சியப்படுத்தப்பட்டாலும் இன்றும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது . இறைவன் இந்த பூமியை ப்ராஜெக்ட் எடுத்து மனிதனை படைத்து அவனுக்காக எல்லாம் படைத்தது என்று பல ஆண்டுகளுக்கு முன் பகுத்தறிவு குறைவான காலத்தில் எழுதியவற்றை இன்றும் பின் பற்றி வருகிறான் .

அப்படியானால் எதற்கு மனிதனுக்கு முதல்  டைனோசர்களை  படைத்தார் ? இவ்வாறான கேள்விகளை மீண்டும்  கேட்டாலும் அவற்றிற்க்கு பதில் அளிப்பதில்லை ..

ஆனால் மனிதன் இரண்டு காரணங்களால் இன்று மற்றைய உயிரினங்களை விட அறிவாலும் அனைத்து விடயங்களாலும் முன்னேறி  உள்ளான். அதற்க்கு  முக்கிய காரணம் மனிதனின் சிந்தனை . இதில் முக்கிய பங்கு பகுத்தறிவு ...

ஆபிரிக்காவில் 4 மிலியன் ஆண்டுகளுக்கு முதல் ஒரு வகை குரங்குகளில் (Apes ) இருந்தே கூர்ப்பின் அடிப்படையில் மனிதன் முழுமையாக ஆனான் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது ஆய்வாளர்களால் ... 

australopithecine என்ற இனத்தை சேர்ந்த தெற்க்கு குரங்குகளின் மூளை விருத்தி ௨ மில்லியன் வருடங்களுக்கு விருத்தி  அடைந்தமை ஆராய்ச்சியில் இருந்து எலும்புகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

  முதலாவதாக தற்போது உள்ள சிம்பன்சி குரங்குகளின் மண்டை ஓடு .. 
இரண்டாவது Australopithecine என்ற எமது மூதாதை உயிரினத்தின் 3 .5 மில்லியன் ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு .... 

முன்னர் சாதாரண சமூகம் போல எம்மை போலவே  வாழ பழகி கொண்டன. தாமாகவே தம்மை முன்னேற்றி கொண்டன அவை . ஆனால் எப்போது இரண்டு கால்களில் நடக்க தொடங்கின ...

இதற்க்கான ஆய்வு நடத்தப்பட்ட போது சிம்பன்சிகள் இரண்டு கால்களால் நடக்கும் போது அவற்றிக்கு குறைவான சக்தியே பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நான்கு கால்களால் நடக்கும் போது கூடுதலான சக்தி தேவைப்படுகிறது என ஆய்வறிக்கையில் தெருவிக்கப்பட்டுள்ளது . -University of Arizona, the University of California, Davis, and Washington University in St. Louis

தனது கைகளை வேறு தேவைகளுக்கு ஏற்ப்ப ஆக்கி கொண்டான் அதனால் தான் இத்தனை படைப்புகளும்  . தனது தேவைகள் அதிகரிக்க கைகளை பயன்படுத்தினான் .

மதவாதிகள் கேட்க்கும் இன்னொரு கேள்வி ? உயிரினங்கள் தானாக இரசாயன,  DNA கலப்புகளில் தோற்றம் பெற்றது என்றால் ஆண் பெண் எவ்வாறு  தோற்றம் பெற்றனர்  என்பதே .. இதற்க்கு ஒரே பதில் உலகம் தோன்றி பல மில்லியன் வருடங்களின் பின்னரே உயிரினங்கள்  தோன்றியது என்பது  நிரூபிக்கப்பட்ட வெளிப்படை உண்மை .

ஆண் பெண் தோற்றம் எவ்வாறு ? அப்படியானால் ஆண்  பெண் கலந்த பாலினம் என்று ஒரு இனம் உள்ளதே ??? இதை எப்போது கடவுள் உருவாக்கினார் ? ஆதாம் ஏவாள் தான் கேள்விப்பட்டிருக்கிறேன் ... இதற்க்கான விடையை யோசியுங்கள் . அடுத்த பதிவில் ஆண் பெண் உருவாக்கம் பற்றி பார்ப்போம் .

சிந்தனைகள் அனைவரையும் சேர மறக்காமல் ஓட்டை போடவும் .......

Comments

Anonymous said…
எதோ நடத்துங்க


ஆனா நல்லா நடதுறிங்க
ஹஹா .. நன்றி ..ஏன் இவளவு விரக்தி ?
மிகவும் யோசிக்க வேண்டிய விஷயங்கள்...
கட்டுரை அருமை... சிந்திக்க வச்சிட்டிங்கள்... வேலைப்பழு காரணமாக கன நாள் தங்கள் தளம் வரவில்லை மன்னிக்கணும்.
நன்றி ராஜ ராஜ சோழன் .. மிக்க நன்றி ..சிந்தித்தால் உங்களிடமும் ஒரு உணர்வு வரும்
பரவாயில்லை ..நினைவில் வைத்து வந்து வாசித்துவிட்டேர்களே . நன்றிகள் தோழரே மதி சுதா .. நீங்களும் தொடர்ந்து சிந்திக்க வைகிறீர்கள் :))
// ஆபிரிக்காவில் 4 மிலியன் ஆண்டுகளுக்கு முதல் ஒரு வகை குரங்குகளில் (Apes ) இருந்தே கூர்ப்பின் அடிப்படையில் மனிதன் முழுமையாக ஆனான் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது ஆய்வாளர்களால் ... //

இது மிகத் தவறான புரிதல்.

சார்ள்ஸ் டார்வின் சொன்னது "மனிதனும், குரங்குகளும் ஒரு பொது மூதாதையிடமிருந்து கூர்ப்படைந்து வந்தன' என்பதே.
அதாவது மனிதனுக்கும், குரங்கிற்கும் ஒரு பொது மூதாதையினர் இருந்தனர் என்பது மட்டுமே அவர் சொன்னது.

http://www.pbs.org/wgbh/evolution/library/faq/cat02.html